நாம் இருவரே இறுதிவரை

ஆசையோடு வளர்த்தவர் எல்லாம்
ஆதரவும் காட்டவில்லை !

பாசத்தைக் கொட்டியும் பலனில்லை
வீதியில் நான் இன்று !

ஒட்டி உறவாடிய உறவுகளும்
ஒதுக்கிவிட்டனர் நேசமின்றி !

ஆறறிவு உள்ளோர் வரவில்லை
ஆறுதல் கூறிடவும் அருகில் !

ஐந்தறிவு படைத்த நீயன்றோ
நெருங்கி வந்தாய் என்னிடம் !

கைவிட்டதால் கலங்கினேன் ,
உன் கைப்பட்டதால் மகிழ்கிறேன் நான் !

நான் ஒருத்தியல்ல இன்று முதல் ,
நாம் இருவரே இறுதிவரை !

துடிக்குது உள்ளம்
கண்டதும் காட்சியை ,
வடிக்குது செந்நீர்
வெடித்த நெஞ்சம் !

இந்நிலை வேண்டாம்
எவருக்கும் எந்நாளும் !
கல்லான இதயங்கள்
கற்றிடுக மனிதத்தை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Aug-21, 8:18 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 254

மேலே