நான் பெற்ற வரம்
கிரேக்க மன்னன் மைடாஸ்
தொட்டதெல்லாம் பொன்னாக
வரம் பெற்றான்
ஒரு நாள் தான் பெற்ற
அருமை மகளையும் தொட்டான்
பெண்ணும் பொற்சிலையாகிப் போனாள்
வருந்தினான் கண்ணீர் உகுத்தான்
வரமா இது ? வரம் சாபம் ஆனது !
நான் பார்த்தால்
பெண்போல நாணுகிறாய்
நான் உன்னைத் தொட்டால்
நாணத்தில் பொன்னாய் சிவக்கிறாய்
இது நிச்சயமாக
நான் பெற்ற வரம் !