அரசியல் நாடகம்
அரசியல் நாடகம்
சாதியால் உயர்ந்தவன்
சாதியில்லை என ஓதிடுவான்.
பணத்தால் உயர்ந்தவன் சோஷலிசம் பேசிடுவான்.
இருவரும் சேர்ந்தே
அரசியல் கூத்திடுவார்.
இதைப் பார்க்க
கூடி இருந்த மக்கள்,
" மாடாக உழைத்து உணவளித்து,
மாண்ட உழவனை
மறந்திட்டே " மகிழ்நதே ஆர்ப்பரிப்பார்.
ஆனால்,
இமயமலை உச்சியில்
இமயவனும் இமயவளும்
இதைப் பார்த்தே சலித்து
இடம் மாறிப் போய்விட்டார்.
இதை அறிவாரோ இவர்கள்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.