சிறுமி

சிறுமி

பகலில்
அம்மாவின் கை பிடித்தே
அ , ஆ , ... எழுதிடுவேன்.

அப்பாவின் தோள் ஏறியே
வேடிக்கை பார்த்திடுவேன்.

அக்காளின் சட்டை போட்டே
வேடிக்கை காட்டிடுவேன்

அண்ணன் முடி கலைத்தே
குறும்புகள் செய்திடுவேன்.

தம்பியை கட்டி பிடித்தே
மகிழ்ந்திடுவேன்.

இரவில்
அப்பா அம்மா நடுவினிலே
தூங்கிடுவேன் நான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (31-Aug-21, 8:51 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : sirumi
பார்வை : 59

மேலே