அன்னை

கட்டளைக் கலித்துறை

முன்னைநின் அன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்திச்
கண்ணமும் கிள்ளிய நாளல்லகா னெண்ணைக் காப்பதற்கே
அன்னமும் மஞ்ஞையும் போலிரு பெண்கொண்ட வாண்பிள்ளைநீ
இன்னமும் சின்னவள். றானோ செந்தூரி லிருப்பவனே

உன்னை உனது தாயானவள் குழந்தையைப் பெற்று முலைப்பாலூட்டி கண்போல
ஈ எறும்பு நெருங்காது காத்து கன்னத்தில் கிள்ளிக் கொஞ்சி கண்ணுக்கு
மையிட்டு மூக்கில் வாய் வத்து சளியை நீக்கி காத்தாள்
இன்று வாளிப்பான இரண்டு பெண்களை கொண்டிருக்கின்ற
பெரிய ஆண் பிள்ளையான பிறகும் செந்தூரில் குடிகொண்டிருக்கும்
எம்பெருமான் முருகவேளே நீ யின்னும் சிறு பிள்ளையோ சொல்


.......

எழுதியவர் : பழனி ராஜன் (1-Sep-21, 8:19 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : annai
பார்வை : 720

மேலே