அன்னையின் தாலாட்டு
ஆராரோ ...ஆரிரரோ ...என்று
என் அன்னை அவளது
குழந்தை பருவத்தில்
கேட்டு கண்ணுறங்கிய
தாலாட்டு பாட்டை
நினைந்து நினைந்து ..!!
யாரடிச்சு நீ அழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
அடிச்சவரை சொல்லி அழு
என்று இன்பமூட்டும்
நீலாம்பரி ராகத்தில்
தன் குடும்ப பெருமை
குலப்பெருமை
மாமன் பெருமை என்று
வரிசையாக சொல்லி
தாலாட்டு பாடினாள்
நான் கண்ணுறங்க ..!!
--கோவை சுபா
***பின் குறிப்பு ...தாலாட்டு
பாடல்கள் பெரும்பாலும்
"நீலாம்பரி" ராகத்தில் தான்
இருக்கும்