மதமும் மனிதனும் ஒரு பார்வை

மதம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான். நீங்களே சிந்தித்து பாருங்கள் மதம் என்பது எந்த காலகட்டத்தில் உருவனது என்று கண்டிப்பாக யாராலும் யூகிக்கமுடியாது. நாம் அனைவரும் நம்முன்னோர்கள் வகுத்த பாதையில் அவர்களை பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு என்னசொன்னார்களோ அதுதான் நம்முடைய மதம் அதனை பின்பற்றித்தான் நாம் வாழ்ந்துவருகிறோம். அப்படி பட்ட மதத்தை பற்றித்தான் நான் இந்த சிறுகதையில் என் மனதில் அனுபத்தில் உதித்த சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

மதம் என்பது ஒருவிதமான மாயையே. மனிதர்களை மதிமயங்க செய்யும் ஒரு செயல். சொல்ல போனால் ஒருவித போதை. அவர் அவர்கள் அவர் அவர் மதத்தை உயர்த்தி பேசுவது வழக்காமாவிட்டது. சொல்லப்போனால் மதத்திற்கு அக்மார்க் முத்திரை குத்தியதே மனிதன்தான். ஒவ்வொருவரும் மதம் என்பது புனிதமானது என்று. நன்றாக சிந்தித்து பாருங்கள் அந்த புனிதம் எங்கிருந்து உருவாகிறது. யாரால் உருவாக்க படுகிறது யாரால் பின்பற்றப்படுகிறது என்பதையெல்லாம் யோசித்து பார்த்தால் அவை அனைத்தும் நம்மை போன்ற மனிதர்களாலேயே அரங்கேற்றப்படுகிறது. புனிதம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே மனிதன்தான்.

நன்றாக சிந்தித்து பாருங்கள் ஆதாம் ஏவாள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் அவர்கள் ஆண் பெண் என்ற இனம்தானே அவர்களிடம் மதம் இருந்ததா கிடையாது அப்படி இருக்கும் பட்சத்தில் மதம் என்னும் ஒரு பிரிவினை செயல் எங்கிருந்து தொடங்கியது என்று யோசித்து பாருங்கள். இந்த மதம் என்னும் பிரிவினை மதம் பிடித்த மனிதர்களால் எப்போதோ ஒரு காலகட்டத்தில் உருவாயிருக்கவேண்டும். இன்று கூட ஆதிவாசிகளிடம் மதம் கிடையாது ஏன் பிற உயிர்களிடமும் மதம் கிடையாது. இந்த மதம் மனிதர்களை மட்டுமே சீரழிகிறது அதற்கு காரணம் மனிதர்களே.

மனித உயிர்கள் உருவாவதற்கு ஆண் பெண் இருவர் போதும் அதற்கு மதம் தேவையில்லை. மதம் என்பது ஓன்று இல்லாமல் மனிதன் வாழமுடியாத என்ன யோசித்துப்பாருங்கள். இன்னும் சொல்ல போனால் நம்மை போன்ற மனிதர்களே தங்களது மதத்தை பரப்ப போட்டிபோடுகின்றனர். மதத்தை தங்களது ஆதாயத்துக்காக அரசியலாக்குகின்றனர். மனிதர்களின் இடையே ஊறிப்போன மதம் தெளியவேண்டும் என்றால் முதலில் மனிதர்களின் மனம் தெளியவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் நாம் எப்படி இந்த மதத்தில் வந்தோம் இந்த மதம் என்பது எப்படி தோன்றியது என்பவை எதுவும் தெரியாது ஆண்டு ஆண்டுகாலமாக எந்த கேள்வியும் இன்றி முன்னோர்கள் வகுத்த மதம் என்னும் பாதையில் நாம் பயணிக்கின்றோம். யாரும் அதை பற்றி ஆராய்ந்து பார்ப்பதில்லை. சொல்ல போனால் மதம் என்பது தொன்று தொட்டு வரும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. என்னை பொறுத்த வரை மதம் என்பது முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பிரிவினைகளால் தங்களுக்குள் ஏற்பட்ட அரசியல் போட்டியால் உருவாக்கி இருக்கலாம் என்றுதான் யூகிக்கமுடிகிறது.

கண்டிப்பாக ஆண்டவன் மதத்தை உருவாக்கவில்லை. சொல்ல போனால் மிகவும் கொடுமையான விஷயம் கடவுளையும் மதம் சார்ந்து பிரித்து இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. கடவுளுக்கே மத முத்திரை குத்தியதும் நம் மனித இனம்தான்.

ஓன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இந்த மதம் என்னும் மாயை ஒருகட்டத்தில் மனிதனை மனிதனே அழித்துக்கொள்ள கூடிய நிலைக்குவந்துவிடும். அதற்கு சாட்சியாக பல உலக நாடுகளில் அரங்கேறிவரும் மத கலவரங்களை நாம் கண்கூட பார்க்கின்றோம். மதத்தால் பிரிவினைகள் உருவாக்குகிறது . மனிதன் மதம் என்னும் மாயையால் தன்னுடைய தரத்தையே பல நாடுகளில் இலக்கின்றான் மதத்தின் அடிப்படையிலேயே நாட்டில் ஆட்சி நடைபெறுகிறது. மதம் பார்த்து சலுகைகள் கொடுத்து மனிதர்களுக்குள் மனிதனே பிரிவினையை வளர்கிறான். பல நாடுகளில் மதத்தை பகடைக்காயாக பயன்படுத்து ஆதாயம் அடைகின்றனர். மதம் என்பதை ஒரு சூதாட்டம் என்று கூட சொல்லலாம்.

மதம் என்பது மனிதர்களின் மனதின் அமைதியை குலைத்து துன்பப்படுத்த வந்த ஒரு செயல். சொல்ல போனால் மனம் இல்லாத மனிதர்களால் உருவானதுதான் மதமாக இருக்குமோ என்று சிந்திக்கத்தோணுகிறது. மதம் என்னும் மாயையால் பலரது திருமணங்கள் சூறையாடப்பட்டு சூனியமாக்கப்படுகிறது பலரது வாழ்க்கைமுடித்துவைக்க படுகிறது. திருமணத்திற்கு இணையும் இருமனங்கள் ஒத்துப்போனால் போதும் அந்த இடத்தில் மதம் அவசியம் இல்லை.
என்னுடைய சிந்தனைக்கு எட்டியவரை மதம் என்பது ஒரு பூஜ்யமே. ஆதாம் ஏவாள் காலத்தில் இல்லாத மதம் அவர்கள் காலகட்டத்தில் பூஜ்யமாக இருந்த மதம் எப்படி பிற்காலத்தில் மதம் என்னும் மதிப்புள்ள எண்ணிக்கையாக மாறியது என்பதை நன்கு சிந்தித்து பாருங்கள். அப்படி உருவான மதம் மனிதர்களின் வசதிக்காக அவர்களின் சில சச்சரவுகளால் எண்ணவோட்டத்தில் உருவானதாகத்தான் இருக்க முடியும். மனிதர்களாக பார்த்து உருவாக்கிக்கொண்டதுதான் மதம். சொல்லப்போனால் கண்டிப்பாக மதம் உருவானதற்கு அதிகார பூர்வமாக எந்த வரலாறும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஓன்று இருந்தால் அது மனிதனால் உருவாக்கப்பட்டது தான் அது ஒரு மாயை என்று தான் சொல்லவேண்டும். நம்முடைய மனம் எப்பொழுதும் சுத்தமாக தூய்மையாக இருந்தால் மதம் ஒரு தடை இல்லை. சொல்ல போனால் நம் மனமே நமக்கு கடவுள். ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கும் நானே என் முன்னோர்கள் வகுத்த மதம் என்னும் பயணத்தில் தான் பயணித்துக்கொண்டுள்ளேன். நானே அதில் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறேன் இப்படித்தான் பல மனிதர்கள் பல மதத்தில் உள்ளார்கள் வேறுவழியின்றி. நாம் யாரையும் தப்பு சொல்ல முடியாது. வருங்காலங்களில் மனிதர்களாக பார்த்து மனம் மாறி திருந்தினால் சிறப்பு. அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை மதத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து பிரிவினைகளை உண்டுபண்ணாமல் இருப்பது நன்று.

எழுதியவர் : முத்துக்குமரன் P (3-Sep-21, 7:40 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 184

மேலே