ஆசிரியர் தினம்

"பள்ளிக்கூடம்" என்பது
மாணவப்பருவத்தின்
ஓர் "நினைவுகூடம் "
ஆசான்களின்
"அறிவுக்கூடம்"...!!

எண்ணும் எழுத்தும்
மாணவர்களுக்கு கற்பித்து
அறியாமை இருளை அகற்றி
அறிவு சுடர் ஏற்றி
சிகரம் தொட வைத்த
ஆசானுக்கு முதல் வந்தனம் ..!!

உலகத்தில் ஏற்படும்
மாற்றங்கள் அனைத்தும்
உதயமாகும் இடம்
பள்ளிக்கூடம் தான் ..!!

உதயமாகும் மாற்றங்களை
வகுப்பறை என்னும்
"நினைவுகூடத்தில்" கற்பித்து
கல்லில் சிலை வடிக்கும்
சிற்பிப்போல்
மாணவ சமுதாயத்தை
நன்கு செதுக்கி ...!!

இந்த மண்ணுலகில்
சிறந்த மனிதனாக
மாணவர்கள் திகழ்வதற்கு
நற்போதனைகளை
கல்வியுடன் கலந்து
கொடுத்த ஆசானுக்கு
கோடி வந்தனங்கள் ..!!

உங்களின்
அருமை பெருமைகளை
ஆசிரியர் தினமான இன்று
நினைத்து பார்த்து
உங்களை மானசீகமாக
வணங்கி மகிழ்கின்றோம் ...!!

ஆசியர்கள் அனைவருக்கும்
"ஆசிரியர் தின வாழ்த்துக்கள்"

வாழ்க ஆசிரியர்களின்
சீரிய பணி...!!
மலரட்டும் புதிய சமுதாயம்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Sep-21, 10:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aasiriyar thinam
பார்வை : 368

மேலே