பாலைமரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதப் பெருக்குபித்த மாறாச்சு வாசமுதல்
ஓதுசர்வ தோஷமும்விட் டோடுங்காண் - தீதுபுரி
வேலைப் பொருவுவிழி மெல்லியலே காட்டிலுறை
பாலைக் கெனவுன்னிப் பார்
- பதார்த்த குண சிந்தாமணி
இதற்கு வாதப்பெருக்கு, பித்த நோய், மாறாத சுவாசம், முத்தோடம் ஆகியவை நீங்கும்