விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்

"அந்த பிள்ளை யார்? "

"அன்னை தந்தையே 'உலகம்'
என்ற பிள்ளை,
தன்னை அண்டி வந்தோரின்
கலக்கம் போக்கும் பிள்ளை ,

யார் அந்த பிள்ளை ?

சுற்றி வரும் அன்பர்க்கு,
வற்றாத அருளை தரும் பிள்ளை, பாதங்களை பற்றி விடும் ,
பக்தர்களுக்கு சற்றும் குறைந்திடாத பொருள்
அளிக்கும் பிள்ளை,

யார் அந்த பிள்ளை ?

மதி கொண்டு தொழுதிட்டால்,
நற்கதி தந்து காத்திடும் பிள்ளை.
ஞான அதிபதியென வணங்கிட்டால்,
சகல சதியினின்றும்
காத்திடும் பிள்ளை.

யார் அந்த பிள்ளை ?

பார்வதியின் பிள்ளை !
பரமசிவனின் கிள்ளை!

அவர்தான் நம் 'பிள்ளையார்'!

அப்பிள்ளையை நினைத்து விட்டால்,
நல்மதியால் துதித்து
விட்டால் போதும்,
என்றுமே இல்லை,
நமக்கு தொல்லை!

"விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

எழுதியவர் : (10-Sep-21, 10:34 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 86

மேலே