விடை
விடை தெரியாத விடியலுக்குள் இருக்கிறது என் காதல்...
கண்ணீரும் வற்றி போனது...
புன்னகையும் புதைந்து போனது...
ஒற்றை செடியில் பூத்த மலர் போல் என் காதல் என்னுள் மட்டும் புதைந்து கிடக்கிறது...
எழுதப்படாத காகிதம் போல் இருக்கும் என் மனதில் ஓர் ஆறுதலுக்காக ஒரே ஒரு கிறுக்கல் மட்டும் இட்டு செல்...
உன் நினைவாக...