வீரத் தமிழரை வளர்க்கும் மாந்தர்

கட்டித்தழுவி முத்தமிட்டாள் நெற்றி திலகத்தில்
உச்சி முகர்ந்து மீண்டும் முத்தமிட்டு
'வெற்றி வாகைச் சூடி மீண்டுவா
சென்றுவா மகனே என்று போருக்கு
அனுப்பிடுவாள் வீரத்தாய் .... பின்னர்
வீரனவன் மனைவியிடம் செல்வான் அவளும்
கட்டியணைத்து முத்தம் தருவாள் நெற்றி திலகத்தில்
பின்னர் கன்னத்தில் முத்தம் இட்டு
' அன்பே சென்றுவா வீணரை வீழ்த்தி
வெற்றியுடன் வாகைசூடி வாயேற்றமுடன்
ஊரும் உலகும் உன்னைப் புகழ்ந்திடவே'

தாயின் முத்தத்தில் பாசமும் வீரமும்
தாரத்தின் முத்தத்தில் அன்பும் வீரமும்

அன்றுமுதல் இன்று வரை தமிழ்ப்பெண்ணின்
முத்தங்கள் வீரத்தையும் ஊட்டி வளர்த்தது
இவ்வாறே வீரத்தமிழன் மண்ணிற்காக
போரிடும் முன் வீட்டில் விடைபெறுதல் இவ்வாறே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-21, 10:58 am)
பார்வை : 46

மேலே