கால நேரம்
"நானாக கழித்த வீணான நேரங்கள்,
காணாமல் போன பின்பு ,
தானாக வருமா ?
வேணாது கடந்த பொழுதுகள்,
தேனாக நினைத்து அழைத்தாலும்,
கோணாது வருமா ?
'காலம் பொன்னானது ,
கடமை கண்ணானது' !
அதை உணராது போன போது,
வாழ்வு மண்ணானது ,
மனதே புண்ணானது."