நம்பிக்கை
"என்னிடம் உள்ளது ஒரு 'பூதம் ''
நான் மறுத்தாலும் விலகாது
எனை ஒருபோதும் ,
நினைத்து விட்டால் போதும் ,
'வெற்றி, வெற்றி' என ஓதும் ,
அதுதான் அதன் வேதம்,
'முயற்சியெனும்' அப்பூதம் ,
'நம்பிக்கை' எனும் விளக்கின் பூதம்,
'நம்பி கையால்' உழைத்தால் போதும் ,
அது தரும் பலனோ 'பிரமாதம்' !
தினம் பணிவேன் அதன் பாதம்,
பிறகென்ன வாழ்வே ஆகிடும்
அற்புதம். "