கலங்கரை விளக்கு

ஓடும் நதியிலே
ஒய்யாரமாய் போகுது
ஒரு படகு

மறுகரை செல்ல ஆசைகொண்டேன்
மறு நொடியில் அதில் ஏறிக்கொண்டேன்
கால் நனையாமல் கரைகடக்கலாமென
நான் நினைத்தேன்

நதிபோடும் நடையழகில்
நான் மயங்கித் தூங்கினேன்
நதி போய் சேர்ந்தது கடலிலே
நானும் போய்ச்சேர்ந்தேன் அதன் இடையிலே

கடலென்னும் உலக ஆசையால்
கரைந்தது என் கனவுகள்
கண்வீழித்துகொண்டவ்ர்கள் சிலர்
கரையிலே - அவர்களை
காலம் சொன்னது கலங்கரை விளக்கென

எழுதியவர் : சுந்தர் (1-Oct-21, 4:46 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 174

மேலே