வாழ்க்கை கடல்

மனிதனின்
வாழ்க்கை என்பது
கடல் போன்றது...!!

கடலில் நீந்தி செல்லும்
மனிதர்கள் எல்லாம்
கடலின் ஆழத்தை
அறிந்தவர்கள்
என்று எண்ணாதே...!!

அதுபோல்
வாழ்க்கை கடலில்
நீந்தி செல்லும்
எல்லோரும்
வாழ்க்கையின்
அருமை, பெருமைகளை
அறிந்தவர்கள்
என்றும் எண்ணாதே...!!

கடலுக்கும் வாழ்க்கைக்கும்
எல்லை அமைத்தவன்
நம் கண்ணுக்கு தெரியாமல்
நம்மை எல்லாம் வழி நடத்தும்
இறைவன் என்பதை
புரிந்து கொண்டு

வாழ்க்கையை அனுபவித்து
வாழ்க்கை கடலை கடந்து
இறைவனின் பாதங்களை
அடைந்து விடு மனிதா...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Oct-21, 11:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhkkai kadal
பார்வை : 231

மேலே