அவள் கண்ணழகு

பெண்ணே உந்தன் கண்ணின் அழகை
ஒரு கவிதைக்குள் அடக்கிவிடலாம் என்று
நான் நினைக்க அதில் இப்போது
காவியமே அடங்கி இருப்பதாய் உணர்கின்றேன்
கவிதை எழுதுவதை விட்டுவிட்டு
இதோ காவியம் எழுதவல்லவோ இப்போது
துடங்கிவிட்டேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Oct-21, 2:28 pm)
பார்வை : 188

மேலே