அவள் பாட்டும் வீணை ஓசையும்
அவள் பாடினாள் சோலைக்குயிலாய்
பாட்டோடு அவள் வீணையும் சேர்ந்து மீட்டினாள்
இவ்வினிய ஓசை இரண்டும் சங்கமித்து
என்னுள் புகுந்து என் இதயத்தைத்
தொட்டு 'உன்னை நான் காதலிக்கிறேன்
இன்னும் நீ புரிந்து கொள்ளாததுபோல்
இருப்பதேனோ என்று ' பாடுகின்றதோ
இப்படி தோன்றியது எனக்குள் ஓர் பிரமை