பஞ்ச பூதங்களாய் பிதா
அன்பைப் பொழிவதில் மழையாய் !
அக்கறை காட்டுவதில் ஆசிரியராய் !
அதிகாரம் செலுத்துவதில் அரசனாய் !
பொருள் ஈட்டுவதில் புயலாய் !
உறவுகளை வளர்ப்பதில் விருட்சமாய் !
தீமைகளை அழிப்பதில் தீயாய் !
பொருமையாய் வாழ்வதில் நிலமாய் !
வளைந்து கொடுப்பதில் வானவில்லாய் !
குணமாய் இருப்பதில் குன்றாய் !
பொறுப்பாய் இருப்பதில் தலைவனாய் !
கண்டிப்புடன் நடப்பதில் எம்டனாய் !
தன் மக்களை சிறப்புடன் வாழ கற்றுத்தந்து -தன்
வாலிபத்திலும் வயோதிகத்திலும்
வீரனாய் , வள்ளலாய்
கனவுகளையெல்லாம் நிஐமாக்கும் தெய்வமாய்
இதயத்தின் துடிப்பாய்
ஒவ்வொரு வீட்டின் சொத்தாய்
ஒளி தரும் சுடராய்
பஞ்ச பூதங்களின் அவதாரமாய் ஆணிவேராய், அடைக்கலம் தரும்
சொர்க்கம் என்றுமே
நம் அப்பா.