மனதின் உணர்ச்சி பெருக்கான கண்ணீர்💛

மனதின் உணர்ச்சி பெருக்கான கண்ணீர்
சில நேரங்களில் மௌனத்தில்
மறைகின்றது
சில நேரங்களில் இடியைப்போல
முழங்குகின்றது
சில நேரங்களில் குழாய்நீரின் சத்தத்தில்
மூழ்கிவிடுகின்றது
சில நேரங்களில் கண்ணுக்குள்ளே
வறண்டு விடுகின்றது
சில நேரங்களில் தலையணைக்குள்
புதைந்து விடுகின்றது
சில நேரங்களில் மகிழ்ச்சியின் போதும்
தோன்றி விடுகின்றது
சில நேரங்களில் நம்பிக்கையானவரிடம்
பரிமாரவும் செய்கின்றது.

எழுதியவர் : மால்யா (2-Nov-21, 12:09 pm)
சேர்த்தது : malya
பார்வை : 595

மேலே