மருத்துவ சமூகத்தை இழிவுபடுத்திய ஜானி தமிழ் திரைப்படம்

பிற்போக்குத்தனத்தின் முழு உருவம்தான் ஜானி திரைப்படம்

1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ந் தேதி வெளிவந்த ஜானி திரைப்படம் , மனிதர்களை அசிங்கப்படுத்தி சம்பாரிக்கும் உலகில் மனிதர்களை அழகுபடுத்தி சம்பாரிக்கும் மருத்துவ சமூகத்தில் சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களை இழிவு படுத்தியதைப்போல் வேறு எந்த படமும் இருக்காது. எந்த அளவுக்கு ஒரு சமூகத்தை இழிவு படுத்த முடியுமோ அதன் உச்சகட்ட வடிவம்தான் ஜானி திரைப்படம் . சமூக நீதியை குழி தோண்டி புதைத்த படம். ஏன் மருத்துவ சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதித்தார்கள் என்று புரியவில்லை . ஒருவேளை அரசியல் அங்கீகாரம் உள்ள சமூகமாக இருந்திருந்தால் திரையிட்டுருக்க முடியாது . அப்படி என்ன இந்த திரைப்படத்தில் கோளாறு பார்க்கலாம்
முதலில் படத்தின் கதாநாயகன் ஜானி ஒரு திருடன் ,ஊரை அடித்து உலையில் போடுபவன் , அயோக்கியன், அவனால் ஒரு மருத்துவ சமூகத்தை சேர்ந்த சிகை அலங்காரம் (பார்பர் )செய்யும் நபர் பாதிக்கப்படுகிறார் உருவ ஒற்றுமை காரணமாக . உருவ ஒற்றுமை என்பதே நகைப்புக்குரியது . திருட்டு ஜானி அழகாக காட்டப்பட்டுளார் ஆனால் பார்பர் வித்யாசாகரோ சோடா புட்டி கண்ணாடி, நடு வகுப்பெடுத்த சிகை அலங்கோலம் (அலங்காரம் ),மீசை கீழே ஒழுகிய வண்ணம் ஒரு முக பாவனை கொண்ட தோற்றம் .ஆண்ட பரம்பரைக்குதான் மீசை மேல் நோக்கி முறுக்கும் வண்ணம் முளைக்கும் போலும் .
திருட்டு ஜானி செய்யும் அணைத்து திருட்டுகளுக்கும் காவல் துறையினர் பார்பரை சந்தேகப்படுகிறார்கள். போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்னமோ அவர் ஐஜி வீட்டு பார்பராக பிறந்தது ஒருவேளை அரச மரத்து பார்பராக இருந்திருந்தால் அவர் கதி அதோ கதிதான் . அப்பறம் அவருக்கும் ஒரு ஜெயிபீம் எடுக்க வேண்டி இருந்திருக்கும் . இது இப்படி இருக்க , அந்த திருட்டு பய ஜானியை பிரபல பின்னணி பாடகியாக வரும் கதாநாயகி தொரத்தி தொரத்தி
காதலிக்குது ஊர் நாட்டில சொல்ற மாதிரி அவன்கிட்ட என்னத்த கண்டுசோ அந்த நாயகி . சரி அது நமக்கு தேவை இல்ல அப்படின்னு விடலாம்முனு நெனைச்சா அங்கதான் ஒரு கேள்வி . அதாவது இந்த படத்தின் சாராம்சம் என்ன சொல்ல வருதுன்னா நீ திருடு ,பொய் சொல்லு ,ஒழுக்க கேடான எந்த ஒரு செயலையும் செய் .உன்னை பிரபல பெண்கள் தொரத்தி தொரத்தி காதலிப்பாங்க . அனால் நேர்மையா உழைத்து பிழைத்தால் பெண்கள் உன்னை உதாசீன படுத்துவார்கள் .
ஏன்னா , அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு அபலை பெண்ணுக்கு அந்த பார்பர் அடைக்கலம் கொடுக்கிறார் . அவளை மனமார விரும்புகிறார் . முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் . ஆனால் அந்த பெண்ணை ஒன்னை விட ஒன்ன பெட்டரா நினைக்கிற கேரக்டர் போல காண்பிக்க முயற்சித்திருக்கிறார்கள் . அதிலேதான் மருத்தவ சமூகத்தில் உள்ள ஒரு பார்பரை அவர் செய்யும் சிகை அலங்கார தொழிலை மிக கேவலமாக சித்தரித்து இருக்கிறார்கள் . ஒன்னை விட ஒன்ன பெட்டரா காண்பிக்க அவள் அந்த பார்பரை விட வசதி படைத்த ஒருவரையோ அல்லது அரசாங்க உயர் அதிகாரியையோ காட்டி இருந்தால் கூட ஒரு லாஜிக் உண்டு . ஆனால் அவள் ஓட நினைப்பது ஒரு சாதாரண டாக்ஸி டிரைவர் கூட, அவரும் அந்த பார்பரை போல் சாதாரண தொழிலாளிதான் இன்னும் சொல்ல போனால் அந்த பார்பர் அந்த டாக்ஸி ட்ரைவரை விட வசதி படைத்தவரை போல் இருப்பார் .
இப்பதான் முக்கியமான செய்தி .
அந்த பெண் ஓட நினைக்கும் தருவாயில் பார்பரிடம் மாட்டி கொள்வாள் . அதற்கு அவள் சொல்லும் பதில்தான் இந்த படத்தை எடுத்த இயக்குனரின் அற்ப புத்தியை காட்டுகிறது அவள் என்ன சொல்லுவாள் தெரியுமா " உங்களை நானும் விரும்புகிறேன் ஆனால் நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து அது பள்ளிக்கூடத்திக்கு போய் எங்க அப்பா ஒரு பார்பருன்னு எப்படி சொல்லும்" இந்த வசனத்தை கேக்குற நமக்கே ரெத்தம் கொதிக்கிதே அந்த பார்ப்பருக்கு எப்படி இருந்திருக்கும் .அவளை கொலை செய்கிற அளவுக்கு தூண்டி இருப்பாள் .அவளை கொலை செய்து விடுவார் அவர் கொலைகாரர் ஆகி விடுவார் .திருடன் ஹீரோ ஆகிடுறான் .
உடனே பார்க்கிற ஆடியன்ஸ்களுக்கு திருட்டு ஜானி மீது அனுதாபம் வந்து விடும் . அவர் ஓடுவார் ஒளிவார் மழையில் நனைவார் பாட்டு பாடுவார் . ஹீரோயின் அவரை நினைத்து உருகுவார் . ஒருவரை ஹீரோ வாக காட்டுவதற்காக ஒரு குறிப்பிட்ட தொழிலை கேவலப்படுத்தி அந்த சமூகத்தில் உள்ளவர்களை புண் படுத்துவது எந்த விதத்தில் நியாயம் . ஒரு பார்பரின் பையன் பிற நண்பர்களுடன் படம் பார்க்கும் போது இந்த மாதிரி காட்சிகள் எவ்வளவு மன சங்கடங்களை உண்டாக்கும் என்பது படம் எடுப்பவர்களுக்கு தெரியாதா ? அரசியல் பின்னணி இல்லாத சமூகங்களை இழிவு படுத்தினால் யாரும் கேக்க மாட்டார்கள் என்கின்ற மமதையா ? தயவு செய்து சினிமா என்கின்ற வலிமை மிகுந்த ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் செய்ய வேண்டியது அனைத்து சமூக மக்களுக்கும் ஒரு நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கி அவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறும்படி படம் எடுப்பதுதான் காலத்தின் கட்டாயம்
நன்றி வணக்கம்
இப்படிக்கு
வைரா

எழுதியவர் : வைரா (5-Nov-21, 7:05 pm)
சேர்த்தது : வைரமுத்து
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே