தப்பாது உலகம் தனையடிமை கொண்டவன் – நீதி வெண்பா 12
நேரிசை வெண்பா
ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான். 12
- நீதி வெண்பா
பொருளுரை:
ஆசைக்கு அடிமைப்பட்டவனே எல்லா உலகங்களுக்கும் குற்றமற்ற நல்ல அடிமையாவான். ஆசைதனைத் தனக்கு அடிமையாய்க் கொண்டவனே தவறாமல் உலகத்தைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டவன் ஆவான்.
கருத்து:
ஆசையில்லாதவனுக்கு உலகம் வசப்படும்.