சென்னை மும்மூர்த்திகள் பகுதி 1

ஒரு அழகிய பெண்ணுடன் ஒரு தனி இடத்தில இருந்தான் வரதன். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுக்கு முன்பின் தெரியாத அந்த அழகியை பார்த்து கேட்டான் " நான் காண்பது கனவா? முரளியும் பாலுவும் எங்கே? நாங்கள் பயணம் செய்த பஸ் எங்கே?. அந்த அழகிய பெண் " நீங்கள் காண்பது ஒருவகையில் கனவு ஆனால் நிஜமே. ஆனால் நீங்கள் குறிப்பிடும் மற்ற விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது. உங்களுக்கு சாப்பிட பழங்கள் பழரசம் கொடுக்கட்டுமா? வரதனுக்கு மனதில் " உன்னை போன்ற அழகி பக்கம் இருக்கையில் வேறு பழம் எதற்கு, உன் செவ்விதழ்கள் துடிக்கையிலே வேறு பழரசம் எதற்கு என்று சொல்ல நினைத்தான். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அடுத்த இரு நிமிடங்களில் வேறு இரண்டு அழகிய பெண்கள் இரண்டு தட்டுகளில் பலவிதமான பழங்களையும் சிறிய கோப்பைகளில் பழரசமும் கொண்டு வந்து வரதன் பக்கத்தில் வைத்து சென்றார்கள். வரதன் கேட்டான் " நான் எப்படி இங்கு வந்தேன். எந்த இடம் இது? உங்களின் பெயர் என்ன? . அழகி சொன்னாள் " என் பெயர் மதுமதி. நீங்கள் வந்துள்ள இடம் பூலோக சொர்க்கபுரி. மிகவும் அதிருஷ்டம் செய்தவர்கள் மட்டுமே இங்கே வர முடியும். வரதன் இன்னும் ஆச்சரியம் அடைந்து கேட்டான் " அப்படி என்றால் நான் எவ்வளவு அதிருஷ்டம் செய்தவன் . இந்த இன்பமான சூழ்நிலையில் உன்னை காணும்போது என் மனம் கொண்டாட்டம் போடுகிறது."
மதுமதி" உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யலாம். இன்னும் மூன்று நாட்கள் இங்கு நீங்கள் இங்கு தங்க முடியும். அதன் பின் நீங்கள் எங்கிருந்து வழி தவறினீர்களோ அதே இடத்திற்கு அனுப்ப படுவீர்கள்"
வரதன் " ஓ ஓ அப்படியா. நீயும் மற்றவர்களும் யார்? எப்படி இந்த உலகத்துக்கு வந்தீர்கள்?
மதுமதி " இது விச்வாமித்ர முனிவர் சிருஷ்டி செய்த திரிசங்கு சொர்கத்தின் ஒரு பகுதியாகும். இப்போது நடந்து வரும் கலியுகத்தில் யார் யாரெல்லாம் உங்களைப்போல் அதிருஷ்டம் செய்தவர்களோ அவர்கள் இந்த சொர்கபுரிக்கு வந்து மூன்று நாட்களில் மீண்டும் பூலோகம் அனுப்பப்படுகின்றனர்."
வரதன் " ஓ ஓ அப்படியா! இதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் ஒன்று, எனக்கு அழகிய பெண்களுடன் இருக்க எப்போதும் ஆசை தான். ஆனால் பூலோகத்தில் அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இங்கே உன்னை பார்த்த பின் எனக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என்றே தோன்றவில்லை."
மதுமதி " இப்போது உணவு அருந்தி விட்டு கொஞ்சம் ஓய்வு எடுங்கள். மாலை நாம் சொர்க்கபுரி பூங்காவிற்கு சென்று வரலாம்."
வரதன் " அப்படியே ஆகட்டும் மதுமதி. ம் ம் இன்று இரவு நான் எங்கு தங்க வேண்டும்?
மதுமதி " இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். என்னுடன் தான் நீங்கள் மூன்று இரவுகளும் தங்கவேண்டும்."
வரதனுக்கு தலை கால் புரியவில்லை. நமக்கு இவ்வளவு அதிர்ஷ்டமான நேரமா என்று நினைத்து மகிழ்ந்து போனான். ஆனால் அவனுடைய குடும்பம் மற்றும் அவனது உயிர் நண்பர்கள் முரளி மற்றும் பாலு இப்போது பாதுகாப்பாக அவரவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்களா, அவர்களுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது என்று கவலையும் கொண்டான். அதன் பின் அவனுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. மதுமதியும் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள், அவன் பக்கத்தில் அமர்ந்து. அவளின் சரீரம் வரதன் மேல் பட்டவுடன் அவனுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்து விட்டது. அவனுக்கு அப்போது தெரிந்தது எல்லாம் அவன் மதுமதியின் அருகில் அமர்ந்து உணவு அருந்துகிறான் என்பது மட்டுமே. உணவுக்கு பின் இருவரும் தனிமையில் ஓய்வு எடுத்தனர். வரதன் பக்கத்தில் மதுமதி வந்து அமர்ந்தாள். வரதனின் கண்களை உற்று நோக்கினாள். வரதனுக்கு அவள் ஒரு அழகிய கவர்ச்சி கன்னியாக தெரிந்தாள். வரதன் மெல்ல அவளது கைகளை பற்றினான். அவன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. பிறகு அவளை மெல்ல தழுவினான். அனைத்து சொர்கங்களும் அதில் அடங்கியது போல் இருந்தது. வட்டமான வசீகரமான அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தபோது அவள் கன்னம் ஒரு வெல்வெட் போல் மென்மையாக இருப்பதாய் உணர்ந்தான். மதுமதியும் கொஞ்சம் கொஞ்சமாக வரதனை அணைத்து கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் புகுந்து விளையாடினார்கள் வரதன் அப்போது நினைத்தான் " ஆஹா, இன்னும் மூன்று இரவுகள் இவளுடன் நான் இருப்பேன். இதைவிட என் வாழ்வில் வேறு எந்த சுகம் வேண்டும். இவளுடன் இருந்தால் நேரம் போவதும் தெரியவே இல்லை. என்ன ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது."
" எழுந்திரு சாமி, எழுந்திரு. எவ்வளவு உலுக்கியும் குலுக்கியும் நீ இரண்டு மணி நேரமாக கண்ணை திறக்கவே இல்லை." என்றார் அங்கே இருந்த ஒரு மனிதர். அவன் முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரை கண்டு வரதன் ஒரு கணம் அதிர்ந்து போனான். இப்போது நான் காண்பது கனவா அல்லது நனவா? என்று நினைத்து குழம்பி இருக்கையில் அங்கிருந்த மனிதர் ஒருவர் " இதுவரைக்கும் ஏதோ கனவு கண்டு உளறி கொண்டிருந்தாய். இப்போது நிஜ உலகில் தான் இருக்கிறாய். இங்கே ஒரு பசு கன்றுக்குட்டி எப்போவாவது ஒருமுறை வந்து செல்லும் . அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. அதனுடன் விளையாட நாங்கள் ஆவலாக இருப்போம். ஆனால் அது எங்களுடன் அதிகம் விளையாடாது. ஆனால் அதன் வாய் எவர் மீதேனும் பட்டால் அந்த மனிதருக்கு உங்களை போல் இரண்டு மூன்று மணி நேர ஆழ்ந்த தூக்கம் வந்து விடுகிறது. அந்த நேரத்தில் அவருக்கு அலாதியான கனவுகள் எல்லாம் வருகிறது. இதை நாங்கள் சில வருடங்களாக கவனித்து வருகிறோம்." என்று கூறினார்.
வரதனுக்கு ஒன்றும் புரியவில்லை. மெல்ல அக்கம் பக்கம் பார்த்தபோது " ஓ ஓ இந்த இடத்திற்கு தான் நான் இன்று காலை , என் நண்பர்களை விட்டு பிரிந்து, வழி தவறி வந்தேன். அதன் பிறகு ஒரு பசு கன்றுக்குட்டி இந்த பக்கம் வந்தது. நான் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடினேன் " என்றான்.
பின்னர் அவன் அங்குள்ளவர்களை பார்த்து " நீங்கள் யார் " என்று கேட்டான். ஒருவர் சொன்னார் " நாங்கள் ஒரு பழங்குடியினர். மொத்தமாக ஒரு 100 பேர்தான் இருக்கிறோம். நாங்கள் இங்குள்ள தாவரங்களின் இலைகள் காய்கள் பழங்களை உண்டுதான் வாழ்கிறோம். இந்த சின்ன மலை பரப்பை விட்டு எங்கும் செல்ல மாட்டோம். நான் ஒருவன் தான் சிலமுறை எங்கள் எல்லையை தாண்டி சென்று உங்கள் உலக வாழ்க்கையை கண்டு வந்து என் மக்களுக்கு சொல்லுவேன்"
வரதன்" என்னை தயவு செய்து மீண்டும் நான் காலையில் வந்து இறங்கிய இடத்திற்கு செல்ல உதவுவீர்களா" என்று சொன்னவுடன் " நிச்சயமாக. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை" என்றான் அந்த பழங்குடி மனிதன். "சொல்லுங்கள்" என்றான் வரதன். " நீ எங்களை பார்த்ததை பற்றி எவருக்கும் சொல்ல கூடாது. ஒரு வேளை அப்படி சொன்னால் உனது வாழ்க்கையில் தீமைகள் அதிகமாக இருக்கும். உன்னை பயமுறுத்த இதை நாங்கள் சொல்லவில்லை. இதற்கு முன்பும் அப்படி தான் நடந்திருக்கிறது"
வரதன் " நிச்சயம் சொல்ல மாட்டேன். ஆனால் என் உயிர் நண்பர்களுடன் தான் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு இன்று காலை வந்தோம். அவர்களுக்கு மட்டும் சொல்லலாமா" என்று கேட்டபோது. " எவரிடமும் சொல்லக்கூடாது என்றால் உன் உயிர் நண்பர்களையும் சேர்த்துதான். எங்களை பார்த்தாய் என்ற விஷயத்தை தவிர வேறு எல்லா விஷயத்தையும் கூறலாம்" என்று அந்த பழங்குடி கூறினான்.
பிறகு வரதனுக்கு உண்ண பழங்கள் கொடுத்து அவனை " இப்போது மிகவும் இருட்டிவிட்டதால் இங்கேயே தங்கி விட்டு நாளை செல்லலாம். எங்கள் இரு பழங்குடியினர் உன்னை பாதுகாப்பாக நீ இன்று காலை வந்தடைந்த இடத்தில் விட்டு விட்டு வருவார்கள்" என்று அவர்களின் தலைவன் போல் இருக்கும் ஒரு பழங்குடி கூறினான்.
அன்று இரவும் வரதனுக்கு கனவு. அதே சொர்க்கபுரி , அதே மதுமதி எல்லாம் முன்பு கண்ட கனவை போலவே இருந்தது. அப்போது மதுமதி " இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க சொர்க வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது . ஓகே சி யு பை" என்று சொன்னவுடன் கண்ணை திறந்து விழித்து பார்க்கையில் மணி அதிகாலை மூன்று அவன் கடியரத்தில். அப்போது தான் அவனுக்கு தெரிந்தது. அவனுடைய செல்போன் காணவில்லை என்று. விடிந்தவுடன் அவன் கேட்டான் " என்னிடம் ஒரு சின்ன கைக்கருவி இருந்தது. நீங்கள் யாரவது பார்த்தீர்களா? என்று . அப்போது ஒருவன் " நீங்கள் மயக்கமாகி நேற்று மதியம் தூணுகையில் ஏதோ சத்தம் வந்து கொண்டே இருந்தது உங்களிடமிருந்து . பார்த்த போது நீங்க சொன்ன அந்த சின்ன கருவி உங்கள் பாக்கெட்டில் இருந்தது. அதை நாங்கள் எடுத்து உடைத்து போட்டுவிட்டோம், அதனால் எங்களுக்கு ஆபத்து ஏதேனும் வரும் என்று.
வரதன் அதற்கு " ஓ அப்படியா பரவாயில்லை. நான் பிழைத்து மீண்டும் திரும்புவதே ஒரு பெரிய விஷயம் தான்" என்றான். ஆனால் மனதில் " நீங்கள் உடைத்து சாதாரண போன் இல்லை 30000 ரூபாய் செலவு செய்து ஆசையுடன் வாங்கிய என் உயிர் போன் என் அருமை பழங்குடியினரே" என்று நினைத்து கொண்டான்.
அடுத்த நாள் விடிகாலையிலேயே வரதனை இரு பழங்குடி மனிதர்கள் அவனை குன்றாத நீர்வீழ்ச்சி எல்லையில் ரகசியமாக விட்டு விட்டு உடனடியாக சென்றுவிட்டனர் . வரடனிடம் நல்ல வேளை அவன் பர்ஸ் இருந்தது. அருகில் உள்ள உள்ள ஹோட்டலில் சூடாக பில்டர் காபி குடித்தான். அவன் காபி அருந்திக்கொண்டிருக்கும்போது அவன் பின்னாலிருந்து இரு கைகள் அவன் கண்களை பொத்தின. அந்த கணமே வரதனுக்கு தெரியும் இது பாலு அல்லது முரளியாகத்தான் இருக்கும் என்று. அவன் கணிப்பு மிகவும் சரிதான். முரளி தான் அவன் கண்களை பொத்தியது.
முரளி " என்ன வரதா, எங்களுக்கு சொல்லிக்கொள்ளாமல் தனியாக புதிய ஒரு தேனிலவுக்கு சென்று
வந்தாயா?"
பாலு " எனக்கும் அந்த சந்தேகம் தான், நேற்று அருவியின் அருகே எவ்வளவோ பெண்களை பார்த்து ரசித்ததை நாங்கள் இருவரும் பார்க்காமல் இல்லை. அதில் யாரையாவது முற்றுகை இட்டு தூக்கி சென்று விட்டாயா?"
வரதன்" நீங்கள் இருவரும் சொல்வதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது. நான் ஏதோ ஒரு மர்மமான இடத்திற்கு என்னை அறியாமல் சென்றுவிட்டேன். அங்கே என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். அந்த தூக்கத்தில் நான் கண்ட கனவை என்னென்பது, தேனிலவு என்பதா, பகலில் ஒரு இரவு என்பதா, அழகு தேவதைகள் இரவு என்பதா, உல்லாசத்தின் ஊஞ்சல் என்பதா என்று சொல்லிவிட்டு அவன் ஒரு பசு கன்றினை சந்தித்ததையும் பின்னர் உண்டான அந்த சொர்க்கபுரி கனவையும் இருவருக்கும் சிறிய அளவில் தெரிவித்தான். விலாவரியாக சென்னை சென்றபின் விவரிப்பதாக கூறினான்.
வரதன் " ஆமாம் நீங்கள் திரும்பி மைசூருக்கு செல்லவில்லையா? இங்கேயே தங்கிவிட்டீர்களா ?
பாலு " வராதா, நீ மீண்டும் திரும்பி வராதபோது நாங்கள் எப்படி உன்னை விட்டு செல்ல முடியும்? உனக்கு எவ்வளவோ முறை போன் செய்தோம். ஆனால் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் நாம் வந்த டூரிஸ்ட் பஸ் கண்டக்டரிடம் விஷயத்தை சொல்லி நாங்கள் இங்கேயே தங்குகிறோம் என்று சொல்லி விட்டோம். அந்த பஸ்சும் மாலை நாலு மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டது. இதோ எதிரில் தெரியும் லாட்ஜில் தான் இரவு தங்கினோம். இன்று காலை உன்னை காணாவிட்டால் போலீஸ்க்கு FIR கொடுக்கலாம் என்று நினைத்திருந்தோம்.நல்ல வேளை , நாங்கள் இங்கு காபி குடிக்க வந்த நேரம் உன்னை கண்டுபிடித்து விட்டோம்.
வரதன்" என் வீட்டிற்கு ஏதேனும் என்னை பற்றி தகவல் கொடுத்தீர்களா?"
முரளி " இல்லை வரதா, எதற்கு உன் மனைவியின் தூக்கத்தை கெடுக்கவேண்டும் என்று சொல்லாமல் இருந்து விட்டோம். இப்போதும் உன்னை காணாமலிருந்தால் நிச்சயம் உன் மனைவிக்கு போன் செய்து சொல்லி இருப்போம்."
வரதன் " ரொம்ப நல்ல காரியம் செய்தீர்கள் என் அருமை நண்பர்களே. நான் நேரில் செல்லும்போது நடந்தவை எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிடுவேன்"
முரளி " சொர்கபுரியின் அடைந்த இன்பதை கூடவா ?'
வரதன் " உனக்கு தெரியாதா நம்ம எடிட்டிங் கலை. வேண்டியதை சொல்லிவிட்டு அவளுக்கு விருப்பமில்லாததை வெட்டி விடுவேன். என்ன பெரிய விஷயம் , எல்லாம் கனவுதானே "
பாலு " சரி இப்போது நம் கையில் இருப்பது ஒரு வேட்டி தான். மாற்று உடையும் இல்லை. ஓரிரண்டு துணி கடைகள் உள்ளன. குறைந்த பட்ச துணிகள் டவல்கள் வாங்கிக்கொண்டு நீர்வீழ்ச்சியில் நல்ல ஒரு குளியல் போட்டு விட்டு, அருகில் உள்ள உடுப்பி ஹோட்டலில் நன்றாக சிற்றுண்டி எடுத்துக்கொண்டு பஸ் எதிலாவது மீண்டும் மைசூர் சென்று விடுவோம்."
பின்னர் துணிகளை வாங்கி கொண்டு மூவரும் நீர்வீழ்ச்சிக்கு வந்து அரைமணி நேரம் குளித்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் ஹோட்டலில் சூடாக சிற்றுண்டி காபி முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்ட ஒரு அரசு பேருந்தில் மைசூருக்கு புறப்பட்டனர்.
மதியம் மைசூர் சென்று அங்கே ஹோட்டலில் நல்ல உணவு அருந்தி விட்டு அவர்கள் தங்கி இருந்த லாட்ஜ்க்கு சென்றனர். இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு மூவரும் பஸ்சில் பெங்களூரு திரும்பினர்.
அடுத்த நாள் காலையில் மூன்று நண்பர்களும் பெங்களூரை சுற்றி பார்த்தனர். மூவரும் பார்த்த ஊர்தான் இருந்தாலும் மூன்று பேரும் சேர்ந்து சுற்றவில்லை என்பதால், எல்லா இடங்களும் ஒரு புது பொலிவுடன் காணப்பட்டது. அவர்களுக்கு பிடித்த MTR ஹோட்டலில் மதியம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து லால் பாக் பூங்காவுக்கு சென்று ஓய்வெடுத்த வண்ணம் பல வண்ணத்து பூச்சிகளையும் ரசித்து விட்டு, அழகிய பூக்களை கண்டு களிப்படைந்து பின்னர் சூடாக காபி குடித்து விட்டு அங்கிருந்து MG ரோடு வந்து அங்கே கொஞ்சம் காலரா சுற்றி விட்டு அதன் பின்னர் மீண்டும் கொஞ்சம் கேளிக்கைகளுடன் இரவு உணவு அருந்திவிட்டு ஹோட்டலில் சென்று தூங்கிவிட்டனர். அடுத்த நாள் அவர்கள் அவர்களின் பொது நண்பர் ஒருவரின் பையன் கல்யாணத்திற்கு சென்று, அங்கே வந்திருந்த அவர்களது நண்பர்களுடன் அளவளவிட்டிட்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு, மொய் எழுதிவிட்டு, கல்யாண சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஹோட்டல் ரூமுக்கு வந்து சுகமாக உறங்கினர். இரவில் சீக்கிரமே டின்னர் முடித்துவிட்டு இரவு 9 மணி ஸ்லீப்பர் பஸ்சில் கோவா புறப்பட்டனர். பாலு சிறுது நேரத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிவிட்டான். முரளி கொஞ்ச நேரம் வீடியோவில் கன்னட படம் ஒன்று பார்த்து விட்டு 12 மணி அளவில் உறங்கி விட்டார். வரதன் வீடியோ பார்க்கவில்லை, கொஞ்ச நேரம் அவன் கற்பனைகள் சிலவற்றை செல்போனில் பதிவு செய்தான். கிட்டத்தட்ட நடு இரவு 1 மணி வரை தூக்கம் கொஞ்சமும் வரவில்லை. அதன் பின்னர் ஹெட்போன் போட்டுகொண்டு அவனே smule ஆப்பில் பாடிய சில பாடல்களை கேட்டுக்கொண்டே 2 மணி அளவில் தூங்கி போய்விட்டான்.

(சென்னை மும்மூர்த்திகள் பகுதி 2 தொடரும்)


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (22-Nov-21, 7:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 73

மேலே