மழையானவர்கள்

எனக்கான
மனிதர்கள்
எங்கிருந்தேனும்
முளைத்து விடுகிறார்கள்
அன்புச் சாரலோடு
இசைத் தூறலோடு
நகைச்சுவைத் தென்றலோடு
சிரிப்பு முழக்கத்தோடு
வேதனைச் சிறு துளியோடு
ஆற்றுகை ஆறோடு
என்றும்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (22-Dec-21, 8:38 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 92

மேலே