இயேசுத் திருநாள்

#அனைவருக்கும் இனிய
கிருத்துமஸ் தின வாழ்த்துகள்..
💒💒💒💒💒💒💒💒💒💒💒💒💒
🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿

#இயேசுத் திருநாள்

மாட்டுத் தொழுவம் புனித மடைந்தது
மரியாள் மகனும் மண்ணில் உதித்ததில்
கூட்டின ஒளியினை விண்மீன் வானில்
குணமகன் பெருமகன் இயேசு பிறந்ததில்..!

மனித வடிவில் தேவன் பிறந்தான்
மரியாள் சூசை மடியில் தவழ்ந்தான்
புனிதன் பிறப்பில் மகிழ்ந்து களித்தனர்
பூமகன் இயேசுவை வணங்கித் துதித்தனர்..!

எரோது மன்னன் செய்தி யறிந்தான்
ஏனோ இயேசுவின் பிறப்பை வெறுத்தான்
இடர்கள் தனக்கு என்றே அஞ்சினன்
இயேசுவைக் கொல்லக் கட்டளை யிட்டான்..,!

எங்கே இயேசு..? எங்கே இயேசு..?
என்றே அலைந்தார் இரக்கம் தொலைத்தவர்
எங்கும் இயேசு காண்கிலர் அதனால்
எல்லா மழலைக்கும் இறப்பை யளித்தனர்...!

கொடுமை இப்படி நடப்பி லிருக்க
குழந்தை யேசு குடிலில் வளர்ந்தார்
முடுக்கிய சேனை மூர்ச்சை கொள்ள
முழுமதி தேவனை யார்தான் வெல்ல..?

தேவ மைந்தன் பிறப்பே யாயினும்
செய்தார் பணிகள் தந்தை வழியில்
காவல் காப்பவன் என்றார் அவரை
கடவுளைக் கண்டார் மனிதர் வடிவில்..!

ஞான ஒளிக்குச் சொந்தக் காரர்
ஞாலத்தில் மானுட நேசக்காரர்
வானத்து மழையாய் அருளைப் பொழிந்தார்
வாடும் உயிர்களை வளமுறச் செய்தார்..!

கருணை கூர்ந்தார் கள்ள ரிடத்தும்
காட்டிக் கொடுத்தான் யூதாஸ் மடையன்
உறுதுணையாக இருந்த வருக்கு
ஊறுகள் செய்தான் ஏழரை சனியன்..!

மலரில் மகுடம் அணியும் மாண்பினன்
மாறாய் சிரத்தில் முள்ளால் மகுடம்
தோள்கள் சுமந்தன மரணச் சிலுவை
துவளத் துவளச் சாட்டை யடிகள்..!

சிரத்தில் முட்கள் சீண்டியக் குருதி
சிந்தி வழிந்திட இயேசு சரிந்திட
கரத்தில் ஆணிகள் கால்களில் ஆணிகள்
காயம் மேனியில் காண்போர் கலங்க..!

அலறித் துடித்தன கருணை மனங்கள்
அழுது சிவந்தன அன்பின் விழிகள்
மரித்தார் இயேசு இருட்டுத் தினத்தில்
மறுபடி பிறந்தார் புரட்டு உலகில். !

மரியாள் மைந்தன் உதித்த நாளில்
மகிழ்ச்சி பொங்கக் கொண்டா டங்கள்
ஆசிர் வாதம் பெரியோர் அளிக்க
ஆண்டவன் ஆலயம் மெழுகில் சொலிக்க..!

ஆலய மணிகள் ஓசை முழங்க
ஆனந்த செபங்கள் ஆலயம் முழுக்க
ஆண்டவர் மண்ணில் உதித்தப் பொன்னாள்
அருமை கிருத்துமஸ் அருளை வழங்க.!

அனைவருக்கும் இனிய கிருத்துமஸ்
மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!🌹🌹

#சொ.சாந்தி

💒💒💒💒💒💒💒💒💒💒💒💒💒
🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿

எழுதியவர் : சொ.சாந்தி (25-Dec-21, 12:16 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 28

மேலே