நகைச்சுவையில் உழைப்பு

பத்மநாபன்: டேய் தம்பிகளா, நான் தான் நம் நால்வரில் மூத்தவன். எனவே சொத்தில் அரை பகுதி எனக்குதான் சொந்தம்.
பத்மநாபம்: வின்னு, நால்வரில் நேனே இளையவன். நாக்கே ஈ சொத்தில் பாதி ஈவால.
பத்மநாதன்: ஏடா மிடுக்கா, ஞான் தான் ரெண்டாவது. எனிக்கே முக்கால் வாசி சொத்து.
பத்மநாபையா: வாய மூடங்கோ, நானு மூணாது மக, சொத்துல ஜாஸ்தி நன்னது.
அப்பா: இன்னிக்கு சண்டே, சண்டே போடாதீங்கோ. நான் சென்னைல பொறந்து , பாலக்காட்டுல வாசிச்சு, விஜயவாடாவில் பனி பண்னி, மைசூர்ல செட்டில் ஆனேன். எல்லா ஊர்லேயும் ஒரு கல்யாணம் பண்ணி நாலு பொண்டாட்டிங்கோ இருக்காங்கோ. நீங்கோ ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொண்டாட்டியின் பசங்கோ. பத்மநாதன், நீ மதுரை போய் குதிரை ஒட்டி சம்பாதி . குதிரை உன்னை ஓட்டமா பாத்துக்கோ. பத்மநாபாம் , நு கர்னூல் வெள்ளி, வெள்ளி பிசினஸ் சேசுகோ.சனி கிழமை வெள்ளி பிசினெஸ் செய்யாதே .ஏடா பத்மநாதன், கொச்சில போய் அங்கே பீச்சுல வடை வியாபாரம் செஞ்சு இருக்கு. மழை அடிச்சதுன்னா , கொடை வித்து காசு பண்ணு. பத்மநாபய்யா பசவப்பா, நீ மைசூர் பாலஸ்ல மைசூர்பாகு வித்து பொழச்சுக்கோ. சக்கரை விலை ஜாஸ்தியா போச்சுன்னா, வெல்ல பாகு காய்ச்சி அரிசி பொரியில் கலந்து உருண்டை பண்ணி வித்துக்கோ.

என்கிட்டே சொத்து எதுவும் இல்ல. நீங்க நாலு பேர்தான் நம் சொத்து. நாலு காசு சம்பாதிங்கோ. பின்னால கண்ணாலம் கட்டிகோங்கோ.ஆனா கண்ணாலம் ஒண்ணே ஒண்ணு பண்ணுங்கோ. நாலு பெல்லி கல்யாணம் செஞ்சி எனிக்கி எத்ர கஷ்டம்டா, கோவிந்தா. நாலு வருஷம் நாலு பேர தினம் நாலு முறை அனுபவிசிச்சேன். ஆனால் 40 வருஷமா அதிகமா நரக வேதனை தான் அனுபவிக்கிறேன். ஏதோ வீட்டுல நாலு கழுதை இருந்ததால , அட, உங்களை சொல்லல, பின்னால கட்டி போட்டிருக்கே அந்த கழுதைகளைத்தான் சொல்லறேன், அவைகளை பொதி சுமக்க வச்சு துணிகளையும் சாமான்களையும் இங்கிருந்து அங்கேயும் அங்கிருந்து இங்கேயும் கொண்டு சேர்த்து நாலு காசு சம்பத்திகிச்சு உங்களை பத்தாவது வரை படிக்க வச்சேன். வல்சம்மா வயலில் உழைத்தாள், கனகாம்பரம் பூ வித்து கொஞ்சம் பணம் கொடுத்தா, மல்லிகா பெரிய நெல்லிக்கா ஊறுகாய் போட்டு கொஞ்சம் லாபம் செய்தா, ராதாம்மா கோதும்மா இட்லி சுட்டு கொஞ்சம் பணம் புரட்டினா. எல்லோரும் இவ்வளவு கஷ்ட பட்டாலும், இப்போதும் எனக்கு கை வலிச்சா பிடிச்சிவிட பத்மநாதன் அம்மா இருக்கா, கால் வலிச்சா தேச்சுவிட பத்மநாபய்யா அம்மா இருக்கா, முதுகு வலிச்சா அமுக்கி விட பத்மநாபாம் அம்மா உண்டு, என் மனசு வலிச்சா தாங்கிக்க பத்மநாதன் அம்மாயிண்டு.

ஏதோ என்கிட்டே இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தை வித்து பணத்தை உங்களுக்கு சரிசமமாக புட்டு தரேன். நீங்க நாலு புள்ளைங்களும் எனக்கு ஒரே மாதிரி தான். பணத்தை கவனமா சரியாக செலவு முதலீடு பண்ணி பொழைச்சுகோங்கோ. இப்போ போங்கோ.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (9-Jan-22, 12:24 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே