உருகுதே நகைச்சுவை
ஒரு கண்காட்சியில்
ஒருவர் : இந்த கண்காட்சியில் ஒன்றும் புதிதாக தெரியவில்லையே ?
கண்காட்சி செயலாளர்: இந்த கண்காட்சியையே இப்போதுதான் முதன் முதலில் நடத்துகிறோம். அதுவே புதிது தானே?
******
துணிக்கடையில்
வாங்க வந்தவர்: ஒரு மீட்டர் 500 ரூபாய் மிகவும் அதிகமாக தெரிகிறது.
கடைக்காரர் : அப்போ அரை மீட்டர் 250 போட்டுக்கலாமா?
******
தேநீர் கடையில்
வந்தவர் : ஏம்பா சூடா ஒரு கிளாஸ் டீ, நாலு டபரா கொடுப்பா
தேநீர் போடுபவர்: இங்கே நாலு கிளாஸ் டீ வாங்கினாதான் ஒரு டபரா கிடைக்கும்
*****
பழக்கடையில்
வாங்குபவர் : கால் டஜன் சாத்துகுடில அரை கொடுப்பா
கடைக்காரர்: சாத்துக்குடி இல்லாமலேயே அரை விழும். போய்யா.
******
வெண்ணெய் கடையில் கீழ் வருமாறு எழுதப்பட்டிருந்தது.
" இந்த வெண்ணை உருகாது"
வந்தவர் : அதெப்படி உங்ககிட்ட உருகாத வெண்ணெய் இருக்கு?
கடைக்காரர்: எங்க கடைல பிரிட்ஜில தான தான வச்சிருக்கோம். பின்னே எப்படி உருகும்?
*******
ஒருவர் :உங்க தாத்தா 104 வயசுலதான போயிருக்காரு. அப்புறம் ஏன் அழறீங்க?
இன்னொருத்தர்: பின்ன என்னப்பா, இப்போ என் தாத்தாவின் அப்பாவை யார் தேத்துவாங்க?
*******
நண்பர்கள் இருவர் போனில்
ஒருத்தர் : இந்த காலத்துல உண்மையான நண்பர்களை பார்க்க முடிவதில்லை.
இன்னொருத்தர்: அதானால் தான் உன் பக்கத்து வீட்டிலேயே இருந்தாலும் நான் உன்னை பார்க்க வருவதில்லை.
*****
இசையமைப்பாளர் : பாடறீங்க ஆனால் பாடலில் பாவம் அவ்வளவு இல்லை
பாடகர்: அது வேறு எதுவும் இல்லை. எல்லாம் நான் செஞ்ச பாவம்.
******
முதலிரவில்
கணவன்: ஏனடி கண்மணி அருகில் வர நாணம் ஏனடி?
மனைவி: அது வேறு எதுவும் இல்லை மன்னவா. எப்படி நாணம் கொள்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
******
குடிகாரன் போதையில்: என்னை அடித்தவனை அடிக்காமல் விடமாட்டேன்
அருகில் இருந்தவர்: உன்னை யார் அடித்தார்?
குடிகாரன்: குடி போதையில் அது யார் என்று தெரியவில்லை.
****
ஆனந்த ராம்