யாருடனெல்லாம் புணர்ச்சி கூடாது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தேவ குருவரச தீனதூ ரத்தையலர்
பாவல மங்கலமாம் பாவையர்பான் - மேவியின்பங்
கண்டாரைச் சாருமுறு கண்ணிடுக்க மின்றியே
விண்டாரைச் சாருமுன்னி விள்

- பதார்த்த குண சிந்தாமணி

தேவ மகளிர், குருபத்தினி, இராஜபத்தினி, ஏழைப்பெண், தூரமுடைய பெண், பழிப்பெண், விதவை இவர்களைப் புணர்ந்தால் துன்பம், தரித்திரம் இவை இவர்களைத் தொடரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-22, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே