யாருடனெல்லாம் புணர்ச்சி கூடாது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தேவ குருவரச தீனதூ ரத்தையலர்
பாவல மங்கலமாம் பாவையர்பான் - மேவியின்பங்
கண்டாரைச் சாருமுறு கண்ணிடுக்க மின்றியே
விண்டாரைச் சாருமுன்னி விள்
- பதார்த்த குண சிந்தாமணி
தேவ மகளிர், குருபத்தினி, இராஜபத்தினி, ஏழைப்பெண், தூரமுடைய பெண், பழிப்பெண், விதவை இவர்களைப் புணர்ந்தால் துன்பம், தரித்திரம் இவை இவர்களைத் தொடரும்.