அவ்விநயம் ஆறாவன என்பவே மாண்ட குணங்களிற் குன்றா தவர் – அறநெறிச்சாரம் 60
நேரிசை வெண்பா
(’ச்’ ‘க்’ வல்லின எதுகை)
அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குத லவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களிற் குன்றா தவர் 60
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
மாட்சிமைப்பட்ட குணங்களால் குறையாத நிறைந்த பெரியோர்கள் அச்சமும், ஆசையும், லௌகிகமும், அன்புடைமையும், இழிவு மிக்க புறச்சமயமும், கொடுந்தெய்வத்தை துதித்து வணங்குதலும் விநயமல்லாததென்று சொல்லுவர்.