கடுக்காய்ப் பிஞ்சு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வனதுர்க்கிச் சேய்க்கு மணித்தயிலம் பூசி
அனலிற் பொரித்தாங்(கு) அருந்தத் - தினமுமலச்
சிக்கலக்க டுப்பநின்ற சீதமறுங் காற்றுகைத்த
முக்கலக்க டுப்பிருக்கு மோ
- பதார்த்த குண சிந்தாமணி
இதனை ஆமணக்கு நெய்தடவி தீயில் வறுத்துத்தூள் செய்து அப்போதே உண்டால் மலச்சிக்கலும், வெளுமையான சீதமும் நீங்கும்; மூலவாயுவால் பிறந்த முக்கல், ஆசனக்கடுப்பு நீங்கும்