கடவுள்

கடவு ளானவன் கண்ணெதிர் தோன்றிடாக்
கருணை மிக்கவன் காத்தெமை யாள்பவன்
நடத்தி யாட்டிடும் நாடக மாகிய
நமது வாழ்வினை நன்கறிந் துள்ளவன்
மடமை யாதென மக்கள றிந்திட
மனத்தைத் தந்தவன் மாபெரும் வல்லவன்
இடரி லாடிட ஏழ்மைப டைத்தவன்
இருளும் நீங்கிட ஏற்றுவன் தீபமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Jan-22, 1:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 76

மேலே