இதழ்கள் குவித்து சம்மதம் சொன்னவளே 555

***இதழ்கள் குவித்து சம்மதம் சொன்னவளே 555 ***



உயிரானவளே...


தினம் நம்
பேருந்து பயணத்தில்...

உன் காதோர கம்மலை
கண் இமைக்காமல் ரசிப்பேன்...

நான் ரசிக்கவே நீயும்
காற்றில் ஆடும் கூந்தலை...

விரல்கொண்டு
மெல்ல ஒதுக்குவாய்...

உன் வகுப்பறையை
கடக்கும் போதெல்லாம்...

ஜன்னலோர
கம்பி வழியே...

உன் ரோஜா
இதழ்களை ரசிப்பேன்...

மரநிழலில் நீ
அமரும் போதெல்லாம்...

உன்னை தொட்டு மண்ணில் விழும்
பாதாம் மலரை சேகரிப்பேன்...

சொல்ல தெரியாமல்
நான் காதலை சொல்ல...

நீ புருவம் உயர்த்தி
புன்னகைத்தாய்...

புரியாமல் தவித்த எனக்கு
இதழ்கள் குவித்து புரியவைத்தாய்...

அந்த நிமிடம் உன் முகத்தை
முழுமையாக ரசித்தேன்...

காலமெல்லாம்
இடைவெளி இல்லாமல்...

உன்னை நான்
காதலிக்க வேண்டும்...

இமைமூடாமல் நானுன்னை
ரசிக்க வேண்டும்...

என்
முன்னாள் காதலியே...

இந்நாளில் வாழ்வில்
இணையானவளே.....


***முதல் பூ .பெ .மணி .....***

எழுதியவர் : முதல்பூ .பெ .மணி (31-Jan-22, 5:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 327

மேலே