வாய்ப்புகள் வரங்கள்
ஒவ்வொரு காலையும் வாயிலருகே வைத்துப் போகிறது
வாய்ப்புகளை !
ஆர்வமுடன் விழிப்பவன் கரங்களில் அவை அகப்பட்டுவிடுகின்றன !
வாசலில் கிடக்கும் வாய்ப்புகளைக் கூட்டித் தள்ளிவிட்டு
வானத்தில் மிதக்கும் வாய்ப்புகளுக்காக
வலை வீசலாமோ !
அன்பும் வெற்றியும்
வாழ்வின் வாசலருகே
கண்டடைவோர் களிப்படைவர் !
-யாதுமறியான்.