நேரமோ ஒதுக்கவில்லை

காதல் எனும் மலர்செடி
இதயமெனும் தோட்டத்தில்.....
விதையோ
அவன் விதைக்கவில்லை
தவமோ இருக்கவில்லை
நேரமோ ஒதுக்கவில்லை
கிடுகிடுவென தானே
ஊன்றிய விதையில் வேர்விட்டு
தழைத்து வளர்ந்து அவனையே
அசைத்து பார்க்கிறது
அவனே ஆட்டம் கண்டுவிட்டான்
காதலும், கவியும், இன்பக் கனவுகளும்
அவன் இதயத்தை ஆட்கொண்டு விட்டன
இதுவும் ஒரு விந்தையே/
மெல்ல மெல்ல அவன் உள்ளமெல்லாம்
காதல் மயம்
மிதக்கின்றான் காதலில்
நீந்துகின்றான் இன்பக் கனவுகளில்
காதலுக்கு உயிர் கொடுத்து
கற்பனையில் மெருகேற்றி
காதலெனும் களத்தில் அவன் ..
அவன் எண்ணமெல்லாம் காதல்
பார்வையில் காதலின் தேடல்
பரிதவிக்கும் மனமதில் பொக்கிஷமாய் காதல்

























தம்பிய

எழுதியவர் : பாத்திமாமலர் (8-Feb-22, 1:26 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 115

மேலே