வேடிக்கைதான்வேதனைதான்

மனிதன் இயற்கையை வெல்லத் துடிக்கிறான்,
இயற்கை மனிதனை வெல்லத் துடிக்கிறது.
இடையில் நடக்கும் போராட்டம்
ஓ..! அது ஒரு அழகுதான்.
நடுவில் நடக்கும் நாடகத்தில்
மனிதன் மனிதனை வெல்லத் துடிக்கிறான்.
மனதை வெல்ல முடியாத மனிதன்
மனிதனையா வெல்ல முடியும்?
உரிக்க..உரிக்க.. வெங்காயத்தில்
ஒன்றுமில்லாததுபோல்
இந்த நாடகத்தின் முடிவு
தவிர்க்க முடியாத...
தீர்க்க முடியாத...
கடைசியில் ஒன்றுமேயில்லாமல்
முடியப்போகும்
வெறும் காற்றில் நடக்கின்ற
உக்கிர சண்டைதான்.
வேடிக்கைதான்...வேதனைதான்....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (8-Feb-22, 8:14 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 146

மேலே