காதலர் திருநாள்

காதலர் திருநாள் இன்று
காதலர் இணைவார் வென்று !
@@@@@@@@@

ஒற்றை ரோசாவை
இருகையிலும்
முற்றியப் பேரன்பை
முழுநெஞ்சிலும்

சுமந்தேன் கொடுத்தேன் மகிழ்ந்தேன்
காதலர் களிகொள்ளும் தினம் வாழவே !

நின் காதல் பெருவெள்ளம் நான் மூழ்கினேன் !
நினையாத நேரத்தில்
நான் தேக்கினேன்!

எனைச் சாடும் வசவெல்லாம் கவியாகுமே
உனைக் கூவும் கூப்பாடும் இசையாகுமே !

உள்ளத்தில் நீங்காத பெருநாளிலே
உலகத்தில் தீங்கில்லாத் திருநாளிலே !

ஈருடல் ஒன்றாகி மூன்றாகுமே
பாரினில் நம்வாழ்வு சான்றாகுமே !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (14-Feb-22, 12:01 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே