ஆதாமும் ஏவாலுமாய்😍😍

உன் மாயக்கண்ணால் என்னுள்
மையம் கொண்டாய்...

உன் பார்வைப்பட்டவுடன் நானும்
சருகாய்த் தான் போகிறேனே...
விண்ணில் தான் பறக்கிறேனே...
கம்பனாய் மாறிக்
கவிதைகள் தீட்டுகிறேனே...

என்னுள்...
அலையென ஆர்ப்பரிக்கின்றாய்...
கருமேகங்களாய்ச் சூழ்ந்துள்ளாய்...
உன் நினைவுகள் இடைவிடாது பொழிந்து என் தூக்கத்தைத் துரத்திவட்டு
ஆசையைத் தூவிச் செல்கின்றது...

என் கண்மணியே...
ஆதாமும் ஏவாலுமாய்
அன்பின் ஆழம்வரைச் செல்ல ...
என் துணையாகிட ...
வருவாயா...

எழுதியவர் : புனிதா சரவணன் (14-Feb-22, 12:16 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
பார்வை : 131

மேலே