காதலும் வீரமும்

காதலும் வீரமும்
தமிழர் பண்பாடு !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

காதலும் வீரமும் கண்ணெனக் கொண்டவர் /

ஈதலும் கொடையுமே இயல்பென வாழ்பவர்!

கல்வியில் கேள்வியில் கற்றுத் தெளிந்தவர் /

முல்லைக்கும் தேரினை முன்னே அளித்தவர்!

மொழிகளே உலகினில் தோன்றாப் போதிலே /

பழியிலாப் பைந்தமிழ் பாரினில் செழித்ததே!

மானுடர் யாவரும் காடுறைக் காலத்தே

வானுயர் மாளிகைத் தமிழின வாழ்க்கையே!

விருந்தொடு மருந்தொடு விரிந்திடும் மகிழ்வொடு/

திருந்தியப் பண்பொடு தழைப்பவர் தமிழரே!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (15-Feb-22, 2:23 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 72

மேலே