நீயில்லா வீடு

நீயில்லாத வீடு...

கலைந்த அறை,
அழுக்குத் தரை !

ஆளற்ற அடுப்பங்கறை,
தூக்கமற்ற படுக்கையறை !

ஹாலே கதி என்று படுக்கையில்
நெஞ்சருகே உன்னாடையும்,
காதருகே உன் வார்த்தையும் தான்
நானுறங்க மந்திரம் !

முளை விட்டது,
நீ விட்டுப் போன உருளை !
கருத்தும் போனதடி,
நீ உண்ண சொன்ன மாதுளை !

ஹோட்டல் சாப்பாடு,
ஹாஸ்பிடலின் கூப்பாடு !

வாசற் கோலமும்,
பூஜையறை தீபமும்,
உன்னிரு விரல்களால்
எப்போது, நம் வீட்டில்?

முதலவன் எழுத்தும்,
இளையவன் கிறுக்கலும்,
சுவற்றில் அப்படியே, அகலாமல்
டாட்டூ வாக அங்கங்கே!

வாட்ஸப்பில் விழித்து
கழிகிறது நேரம் ...
குட் நைட் டெக்ஸ்ட்
தூங்குவதற்கும் அலாரம் !

நாட்காட்டியும் கடிகாரமும்
கை கோர்த்து என்னோடு
வேகமாய் ஓட!

அந்நாளுக்காக ...!!!
உங்கள் வருகைக்காக...!!!

-முரளிதரன்

எழுதியவர் : Muralidharan (13-Mar-22, 1:21 pm)
பார்வை : 565

மேலே