நண்பேன்டா

நணபேன்டா !
-------------
இளமையில் முதுமையில் இயல்பாய் முகிழ்த்திடும் /

வளமுடன் நெஞ்சினில் வளர்ந்திடும் உறவே !

எங்கோ பிறந்தார் எவ்விடம் வளர்ந்தார் /

இங்கே இதயங்கள் இரண்டும் சேருமே!

ஆயிரம் உறவிலும் ஆனந்தம் சேர்க்குமே /

பாயிரம் மகிழ்வோடு பாடிடும் சொந்தமே !

துன்பங்கள் இன்பங்கள் துயரங்கள் யாவினும் /

இன்முகம் மாறாது இணைந்திடும் துணையே !

வலசைப் பறவையாய் வாழ்வினில் பிரியினும் /
உலகினில் உயர்ந்தது உயரிய நட்பே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (15-Mar-22, 8:49 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 277

மேலே