நதியாய் நாம்
மழைத் துளிகளாய் பிறந்து,
சிறு ஓடைகளாய் வளர்ந்து,
கொட்டும் அருவி போல விழுந்து,
காதலால்,
ஒன்றானோம் ஓர் நதியாய் !
வாழ்வெனும்
ஏற்ற இறக்கங்களில் தவழ்ந்து,
சமுத்திரத்தில் சங்கமிக்க !
பின் மீண்டும் பிறக்க,
மழையாக
இப்பூவுலகில் !
- நா முரளிதரன்