கடுஞ்சொல் ஆதரவையும் ஒழிக்கும் - அறநெறிச்சாரம் 82

இன்னிசை வெண்பா

நம்மைப் பிறர்சொல்லும் சொல்லிவை நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கிவையென் றெண்ணி
உரைகள் பரியா(து) உரைப்பாரில் யாரே.
களைகண தில்லா தவர். 82

- அறநெறிச்சாரம்

(குறிப்பு) களைகண் – ஆதரவு, பற்றுக்கோடு இல்

பொருளுரை:

நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டுமென்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை என்று ஆராய்ந்து தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொற் கூறுவராயின்,

அவரைப்போல் ஆதரவு இல்லாதவர் பிறர் யார்? ஒருவருமிலர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-22, 7:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே