அறிவே துணை
அறிவே துணை..
---------------
இலக்கினைக் குறித்தலும்
இயன்றதை முடித்தலும் /
கலங்கிடா மனதினைக்
காத்தலும் அறிவே !
கற்றிடப் பெருகிடும்
கண்டிட வளர்ந்திடும் /
உற்றதோர் நண்பனாய்
உனக்குள்ளே வாழுமே !
உயர்வினை வாழ்வினில்
உவப்பொடு அளித்திடும் /
அயர்விலா இன்பமும்
அறிவினால் கூடுமே!
அகலாது உறைந்திடும்
அனுதினம் காத்திடும் /
புகலிடம் அறிவெனப்
புரிந்திடின் வெற்றியே !
-யாதுமறியான்.