பிறனில் பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல் இழுக்காம் ஒருங்கே - அறநெறிச்சாரம் 89

நேரிசை வெண்பா

அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடையன் என்றுரைக்கும் தேசும் - பிறனில்
பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல்
இழுக்காம் ஒருங்கே யிவை 89

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அயலான் மனைவியை விரும்பினான் என்று மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அவன் மேற்கொண்ட அறமும், அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய இவை முழுவதும் கெட்டு பழிச்சொல்லுக்கு இடமாகும்.

குறிப்பு: இல் - மனையாள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-22, 2:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே