கவிஞன்
கவிஞன்.
கவிதையில் காதல்
கொண்டு,
காதல் கொண்டாள்
அவள் என் மீது.
காலம் கடந்தே
வந்த காதல் தான்!
"காதலுக்கு கண்
இல்லை,
காதலுக்கு வயதும் இல்லை"
இளம் தளிர் மேனி
தடவி,
இளமை அடைந்தேன்
நான் அவளாலே!
தத்துவக் கவிதைகள்
மனதில் மறைந்து,
காதல் கவிதைகள்
பல பிறந்தது
என் மனதில்.
தினம் தினம்
ஒரு கவிதை எழுதி!
அலங்கரிப்பேன்
அவளை நான்.
படித்திடுவாள்
கவிதைகளை,
சிரித்திடுவாள்
கண்களாலே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.