போராட்டம்

கண்கள் மூடி
காட்சிக்குச்
சிறை போட்டன!

செவிகளோ
சத்தத்துக்குத்
தடை போட்டன !

மனம்
எண்ண மறுக்க,
நல்ல
மணம் இருந்தும்
வாய்
உண்ண மறுத்தது !

கடைசிக் காற்றை
கொஞ்சம்
கடத்தி வைத்தது
நெஞ்சம் !

உடல் மொத்தமும்
மொத்தமாய்
ஸ்லிப் ஆகி
ஸ்லீப் மோடில்
ஸ்டிரைக் செய்தது !

இவை எல்லாம்,
எந்த நொடியிலே !

இடி இசைத்து
தூறல் தெளித்து

காற்றின் சாரல் வழி
மண்ணின் மணம் வீசி

வானவில் மாலை சூடிய
வெயில் கால மழை
நின்று போன நொடியிலே !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (15-Apr-22, 10:59 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : porattam
பார்வை : 212

மேலே