இனிய நினைவுகள்

இனிய நினைவுகள்
துபாய் நகரில் தூக்கம் விழித்த அதிகாலை வேளை
தும்பைப்பூ இட்லியோடு பொடியையும் சேர்த்து
தூய தண்ணீரைத் துணைக்கு வைத்துக் கொண்டு
தூய்மையாக்கிய கைகளால் எடுத்து உண்ணுகையில்
பயணத் துன்பம் மறந்து என்னவளின் அன்பை உணர்ந்து
தூயவளுக்கு நன்றி கூறக் கைபேசியை எடுத்தவேளை
துயில் வேளை என்று கணக்கிட்டு தூங்கட்டும் என எண்ணி
தேன்மொழியாளை அழைக்காமல் மனதை திசை திருப்பி
இல்லாளின் சிரித்த முகத்தை நினைத்து இன்புற்று சாய்ந்து
கண்களை மெல்ல மூடினேன் அடுத்த அறிவிப்பு வரும்வரை.

எழுதியவர் : கே என் ராம் (23-Apr-22, 10:52 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : iniya ninaivukal
பார்வை : 77

மேலே