காதலன் வந்ததும் என்னசெய்வேன்

நேரிசை வெண்பா


காத்துக் கிடந்தவெனக்கு கண்ணா னவர்வர
வேத்து அதிர்ச்சியில் என்செய்வேன் --- ஏத்துவனோ
ஊடுவனோ ஓடித் தழுவுவனோ அன்றியுடன்
கூடுவதோத் தோழியேநீ கூறு


வெகுநாளாக அவருக்காக ஏங்கிக் காத்திருக்கிறேன். அவர் திடீரென வந்து விட்டால்
அவருடன் நான் ஏன் சீக்கிரம் வரவில்லை என்று ஊடல் செய்வேனோ அல்லது
ஓடி அணைப்பனோ அல்லது மகிழ்ச்சியில் கூடுவனோ சொல் தோழி



காமத்துப்பால் அதிகாரம். 19. குறள் 7

......

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-22, 8:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 84

மேலே