நட்பு

நட்பென்ற மழையிலே
நனைய மனம் ஏங்குதடி
நடு சாமம் என்றாலும்
நடு வீதி என்றாலும்...

நினைத்ததை உடன் கூறும்
நிலையான சுதந்திரம் வேண்டும்
நிமிடமும் சிந்திக்காத வார்த்தை
பரிமாறல் வேண்டும்...

நட்பிற்ச் சிறந்த மந்திரமில்லை
நட்பின் தோள் சாய்ந்திட
நாடுது நைந்த மனம்
இயலாது கலங்குது தினம்...

எழுதியவர் : கவி பாரதீ (11-May-22, 7:53 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : natpu
பார்வை : 833

மேலே