கசக்கும் காதல்
கசக்கும் காதல்...
மனமே அறிவின்
ஆதாரம் எனினும்
மனதிற்கு
அறவே இல்லையோ
அறிவென்பது?
உணர்ச்சிகளை உள்வாங்கி
உணர்த்துகின்ற மூளைதனில்
இல்லாதொழிந்த
உணர்வுச் செல் திரள்களைப்போல் !
பார்க்கத் துணியாதவர்க்காக
விழிகள் பிளந்து
பார்த்துக் களைப்பது !
பேசவும் மறுப்பவர்க்காகச்
செவிகள் திறந்து
காத்துக்கிடப்பது !
தொடவும் விரும்பாதவரையேத்
தேடித்தேடி
அலைந்துத் தொலைப்பது !
காத்துச் சலிப்பதையே
தவமெனப்
போற்றிப் பிதற்றுவது !
உள்ளொன்று வைத்து
உறவாடும்
என்மனமே -
உன்னோடு
மல்லுக்கு நிற்பதற்கு
மனவலிமைப் போதாதே !
-யாதுமறியான்.